Monday, December 31, 2007
Tuesday, November 27, 2007
மிளகாய்பொடி வீசப்பட்ட அழகி
தமுமுக - குவைத் சார்பாக நன்றி அறிவிப்பு மாநாடு
குவைத் நாட்டில் தமுமுக - குவைத் மண்டலத்தின் சார்பாக இஸ்லாமியர்களுக்கும், கிருஸ்த்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு அளித்த தமிழக அரசுக்கு நன்றி பாராட்டும் வகையில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு ''நன்றி அறிவிப்பு மாநாடு" ஏற்பாடு செய்யப்பட்டது. தலைமை யிலிருந்து மாநாட்டுக்கான தேதியை அறிவிப்பு செய்தவுடனேயே இதற்கான ஆயத்த வேலைகள் துவங்கப்பட்டன. குவைத் முர்காப் சிட்டியில் தஞ்சை உணவகத்தில் ஷஹீத் ராஜா முஹம்மது நினைவு அரங்கத்தில் கடந்த 23-11-2007 அன்று இரவு 8:00 மணிக்கு மாநாடு துவங்கப்பட்டது. பொருளாளர் சகோ. ஃபஜ்லுர்ரஹ்மான்-திருச்சி அவர்கள் கிராஅத் ஓதி மாநாட்டை துவக்கி வைத்தார். சகோ. கலீல்ரஹ்மான்-எருமப்பட்டி அவர்கள் வரவேற்புரையாற்றி மண்டலத்தலைவர் அமானுல்லாஹ்-திருச்சி அவர்களை தலைமையுரையாற்ற அழைத்தார்.தலைவரின் தலைமையுரையில் "இந்த இடஒதுக்கீடு 60 ஆண்டுகால கனவு, 12 ஆண்டுகால போராட்டம், 16 மாத திட்டம், 12 நிமிடங்களில் நிறைவேறிய அவசரச்சட்டத்தில் இந்தத் தனி இடஒதுக்கீட்டை அறிவித்த கலைஞர் அவர்களுக்கும், இடஒதுக்கீட்டையும், சிறைவாசிகளின் விடுதலையையும் கோரிக்கையாக வைத்து திமுகவுடனான கூட்டனிக்கு திட்டமிட்டு அதன்படி உழைத்து வெற்றிபெறச்செய்த தமுமுக தலைமை முதல் அடித்தொண்டன் வரை அனைவருக்கும் நன்றி " கூறினார்.
சிறப்பு அழைப்பாளராக தமுமுக-ரியாத் மண்டல செயலாளர் சகோ. ஷாநவாஸ்-லால்குடி அவர்களும், குவைத் - தமிழ் கிருஸ்த்தவ திருச்சபையின் தலைவர் சகோ. ஹெர்பர்ட் சத்தியதாஸ்-நாகர்கோயில் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். குவைத்தில் அனைவருக்கும் அறிமுகமான நீண்டகாலமாக சமுதாயத்தொண்டாற்றி வரும் பேரா. தாஜ்தீன்-புதுஆத்தூர் அவர்களும் தங்களது உரையில் பெற்றுள்ள இடஒதுக்கீட்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கி பேசினார்.
மறைந்த இணைச்செயலாளர் ராஜாமுஹம்மது அவர்களின் அன்புச்சகோதரர் சகோ. முபாரக்அலி-லால்குடி அவர்கள் கலந்துகொண்டு பணியாற்றிய டெல்லிப்பேரணி, சிறைநிரப்பும் போராட்டம், இரண்டு வாழ்வுரிமை மாநாடுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளையும் அரங்கம் நெகிழ அழகாக எடுத்துரைத்தார். குவைத் மண்டல இணைச்செயலாளர் சகோ. தமீம் அன்சாரி-முத்துப்பேட்டை அவர்களின் நன்றியுரையோடு மாநாடு இனிதே நிறைவுபெற்றது. மாநாட்டிற்கு பல்வேறு இஸ்லாமிய, தமிழ், கிருஸ்த்துவ அமைப்புகளில் இருந்தும் பெருந்திரளாக வந்திருந்து விழாவைச் சிறப்புச் செய்தனர்.
அதே மாநாட்டில் டிசம்பர் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமை மவ்லவி பி.அப்துல்ரஹீம் நினைவு அரங்கத்தில் நடைபெறவுள்ள பாபர்மசூதி கண்டனக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு இதுவரை ரியாத் மண்டலத்தில் செயலாளராக பணியாற்றிய சகோ. ஷாநவாஸ் அவர்கள், தமுமுகவினர் அனைவரின் விருப்பத்திற்கிணங்க குவைத் மண்டலத்தில் மண்டலச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இரவு தேனீர் விருந்தோடு மாநாடு 10:30 மணிக்கு இனிதே நிறைவடைந்தது. தமுமுகவின் மார்க்கப்பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவையின் வரவேற்பு போஸ்டர் மாநாட்டிற்கு வந்தவர்கள் அனைவரையும் வரவேற்றது.
News from:
TMMK - Media Group
Kuwait
Monday, November 5, 2007
சங்கரன்கோவில் அருகே தேவர் சிலை உடைப்புகிராமமக்கள் சாலை மறியல்-கல்வீச்சு; போலீஸ் தடியடி

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் செல்லும் ரோட்டில் வேலாயுதபுரம் கிராமம் உள்ளது. அந்த ஊர் பொதுமக்கள் சார்பில் ரோட்டு ஓரம் தேவர் சிலை அமைத்து இருந்தனர். சிலையைச் சுற்றி கம்பி வலை அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமிகள் அந்த கம்பி வலையை உடைத்து உள்ளே புகுந்து தேவர் சிலையின் முகத்தை உடைத்து சேதப்படுத்தி விட்டனர்.
நேற்று காலையில் தகவல் அறிந்ததும் அந்த கிராம மக்கள் அங்கு ஆண்களும், பெண்களும் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து அங்கு திரண்டு நின்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். "சிலையை உடைத்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். அந்த இடத்தில் வெண்கல சிலை அமைக்க வேண்டும்'' என்று ஊர் மக்கள் கூறினார்கள். அந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை சாலை மறியலை கைவிட மாட்டோம். மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் இங்கு வரவேண்டும் என்று அவர்கள் கூறி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
அதைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், நெல்லை உதவி கலெக்டர் (ஆர்.டி.ஓ.) ராஜேந்திரன் ஆகியோர் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையொட்டி உடனே சமுதாய பெரியவர்கள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கண்ணப்பன் அங்கு விரைந்து வந்தார். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும் படி போலீசார் கூறினார்கள். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை.
தடியடி
இதையொட்டி கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கினார்கள். கல்வீச்சில் போலீசார் சிலரும், தடியடியில் பொதுமக்கள் சிலரும் காயம் அடைந்தனர். அங்கு நின்று கொண்டு இருந்த ஒரு பஸ் மீது பொதுமக்கள் கல்வீசி தாக்கினார்கள். இதனால் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. தடியடி காரணமாக பொதுமக்கள் சிதறி ஓடியதால் அந்தப் பகுதியில் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்கள், செருப்புகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. அந்தப் பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிறகு அந்தப் பகுதியில் பஸ்கள் வழக்கம் போல் ஓடின. தேவர் சிலை சேதப்படுத்தப்பட்ட தகவல், வேலாயுதபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பரவியது. இதனால் ராஜபாளையம் சுற்றுவட்டாரப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவானது. ராஜ பாளையம்-சங்கரன்கோவில் சாலை விலக்கில் சிலர் மரக் கிளைகளை வெட்டி போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிஜி பிரதமரை கொல்ல ராணுவம் சதி - 11 பேர் கைது
இப்போது அங்கு பிரத மராக இருப்பவர் பிராங்க் பைனிமராமா. 2006-ம் ஆண்டு புரட்சி நடத்தி இவர் ஆட்சியை கைப்பற்றினார். 2009-ம் ஆண்டு அங்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்து இருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் பைனிமராமாவை கொலை செய்யபயங்கர சதிதிட்டம் நடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் உள்ள சில அதி காரர்களும் இந்தசதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையொட்டி ராணுவ அதிகாரிகள், வீரர்கள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நியூசிலாந்து நாட்டவர் ஒருவர் இதில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில் பிஜி தீவில் 4 முறை புரட்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.
Monday, October 29, 2007
தென்காசி பிரச்சனைகளுக்கு என்னதான் தீர்வு?
Wednesday, October 17, 2007
முத்துப்பேட்டை : முஸ்லிம் பெண்களை வெட்ட வந்த சங்பரிவார்!
ஆனால் சங்பரிவார கும்பல் வெறி அடங்காமல் ஸ்டேஷன் வெளியே நிறுத்தி வைத்திருந்த முஸ்லிம்களுக்கு சொந்தமாக ஒரு ஆட்டோவை கொளுத்துகின்றனர். போலீஸும் வேடிக்கை பார்க்கிறது. அதேபோல் தம்பிக்கோட்டை என்னுமிடத்தில் பேருந்தில் வந்த முஸ்லிம் பெண்களை ஒரு கும்பல் வெட்டுவதற்காக பாய்கிறது. அப்போது தடுக்க முனைகிறார் இப்ராஹீம். அதனால் அவரை வெட்டி விட்டு கும்பல் தப்பி ஒடிவிடுகிறது.
சம்பவங்களை கேள்விப்பட்ட முத்துப்பேட்டை முஸ்லிம் இளைஞர்கள் ஒன்று திரள, கலவர அபாயம் ஏற்படு கிறது. பஜாரில் சில கடைகள் தாக்கப்படுகின்றன. உடனடியாக அதிரடிப் படை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்படுகிறது.
இந்நிலையில் முத்துப்பேட்டை நகர தமுமுக செயலாளர் ஹலீம், இப்ராஹீமை வெட்டிய ரவுடிக்கும்பல் மீது வழக்கு பதிவு செய்த FIR நகல் வாங்குவதற்காக முத்துப்பேட்டை காவல் நிலையம் செல்கிறார். ஆனால் சங்பரிவார சிந்தனை கொண்டதாக மாறிவிட்ட முத்துப்பேட்டை காவல்துறை, ஹலீமைக் கைது செய்கிறது. நகர துணை செயலாளர் ரவூப்பையும் வீடு புகுந்து கைது செய்துள்ளனர். அது மட்டுமில்லாமல் பெருநாள் விடுமுறைக் காக வீட்டுக்கு வந்த சென்னை சதக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் தாஜிம் என்பவரையும் கைது செய்துள்ளனர். கலவரத்தை தொடங்கி வைத்து குளிர் காய்ந்து கொண்டிருக்கும் சங்பரிவாரக் கும்பலை விட்டுவிட்டு அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து வரும் காவல்துறையின் போக்கு முத்துப்பேட்டை மக்களை கொதிப்படையச் செய்துள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மாவட்ட துணைச் செயலாளர் தீன்முஹம்மது, கலவரத்தை ஆரம்பித்த சங்பரிவார் கும்பலையும் அதற்கு பின்புலமாக இருக்கும் மகேஷ், கருப்பு, மாரிமுத்து போன்றவர்களை கைது செய்யாமல் அப்பாவிகளை அதுவும் அடுத்த மாதம் தேர்வை எதிர்நோக்கி இருக்கும் மாணவர் உட்பட அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்து வரும் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்களை சட்டரீதி யாக பிணையில் எடுக்க முயற்சிகள் செய்து வருகிறோம். உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யாமல் விட்டு விடும் போக்கினால்தான் முத்துப் பேட்டையில் அவ்வப்போது கலவரம் நடக்கிறது என்றார்.
முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாத் தலைவர் பஷீர் கூறுகையில்
''கடந்த 15 வருடங்களாக இதுபோன்று பிரச்சினைகள் ஏற்படுவது சாதாரணமாகி விட்டது. இதற்குக் காரணம் பிரச்சி னையை உண்டாக்கி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் பி.ஜே.பி., இந்து முன்னணி குறிப்பாக பி.ஜே.பி. மாவட்டச் செயலாளர் கருப்பு போன்றவர்கள்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் உண்மைக் குற்றவாளிகளை விட்டுவிட்டு அப்பாவிகளையும், சம்பந்தமில்லா தவர்களையும் கைது செய்வது காவல் துறையின் வாடிக்கையாகி விட்டது. முத்துப்பேட்டையில் பல ஆண்டு களாக அடிக்கடி நடைபெறும் கலவரத் திற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்
- இந்த ஆண்டு 3.1.2007 அன்று மாலை 4 மணிக்கு மன்னார்குடியில் கோட்டாட்சியரால் அழைக்கப்பட்டு நடந்த சமாதானக் கூட்டத்தில் ஏற்பட்ட எழுத்துமூலமாக சமாதான உடன்படிக்கை யின்படி 'முஸ்லிம் ஜமாத்' தரப்பினர் நடந்து கொண்ட பிறகும், தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய ஆர்.டி.ஓ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
- ஒவ்வொரு கலவரத்தின் போதும் உண்மையான குற்றவாளிகள் யார் என்று காவல்துறை அறிந்தும் அவர்களைக் கைது செய்யாமல் அப்பாவிகளை இரவு நேரங்களில் கைது செய்வதையும் அவர்களைத் துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும்.
- பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் கலவரங்களில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு சரியான நிவாரணத்தை (இழப்பீடு) அரசு வழங்க வேண்டும்
- காவல் நிலையம் எதிரிலேயே ஒரு முஸ்லிம் சகோதரரின் ஆட்டோவை தீயிட்டுக் கொளுத்தி நாசப்படுத்தக்கூடிய அளவுக்கு சமூக விரோதிகளின் அராஜகம் அசுர வளர்ச்சி அடைந்திருப் பதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
- முத்துப்பேட்டை நகர பகுதியில் எப்போதுமே ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டால் கூட சம்பந்தமே இல்லாமல் பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப்பேட்டைக்கு வரும் பேருந்தில் பயணிக்கும் அப்பாவி முஸ்லிம்கள் மீது பி.ஜே.பி. வகையறாக்களால் அடிக்கடி நடத்தப்படும் கொலைவெறித் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார் ஐக்கிய ஜமாத் தலைவர் பஷீர்.
இந்நிலையில் அக்டோபர் 15 அன்று மாநிலச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி முத்துப்பேட்டைக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார்.
மாநில துணைச் செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி தலைமையில் தமுமுக குழு ஒன்று திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரசேகரனை சந்தித்து முத்துப்பேட்டை நிலைமைகளை எடுத்துரைத்து நியாயம் வழங்கக் கோரியது.
தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகியோர் தலைமைச் செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து முத்துப்பேட்டை நிலவரங்களை எடுத்துக் கூறினர். அப்பாவிகளைக் கைது செய்வது பிரச்சினைக்கு எவ்வகையிலும் தீர்வு தராது என்பதை அவர்கள் எடுத்துரைத்து, கைது செய்யப்பட்ட அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரினர்.
சங்பரிவார சக்திகளிடம் வீழந்துவிட்ட முத்துப்பேட்டை காவல்துறை தலை நிமிருமா?
நன்றி:www.tmmk.in
குவைத்தில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்
Monday, August 27, 2007
கோவை குண்டு வெடிப்பு - நடந்தது என்ன? - 2
கோவை குண்டு வெடிப்பு - நடந்தது என்ன? - 1
Thursday, August 16, 2007
தென்காசியில் இயல்பு வாழ்க்கை இரண்டாவது நாளாக பாதிப்பு
கோஷ்டி மோதலில் ஆறு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட தென்காசியில், நேற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென்காசியில் காசி விஸ்வநாதசுவாமி கோவில் எதிரே இடம் வாங்கி, முஸ்லிம்கள், மசூதி ஏற்படுத்தி வழிபாடு நடத்துகின்றனர். இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இந்து முன்னணி குமார்பாண்டியன் வெட்டிக்கொல்லப்பட்டார். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக மைதீன்சேட்கான் வெட்டப் பட்டார். பழிவாங்கும் நடவடிக்கையால் பல வன்முறை சம்பவங்கள் நடந்தன. தென்காசி கூலக்கடை பஜாரில் இருதரப்பும் நேருக்கு நேராக நேற்று முன்தினம் மோதியதில் ஆறு பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்ட பஷீர், அசன்கனி, நாகூர்மீரான் உடல்கள் நேற்று முன்தினம் இரவில் அடக்கம் செய்யப்பட்டன. குமார்பாண்டியனின் சகோதரர்கள் செந்தில், சுரேஷ், சேகர் ஆகியோரது உடல்கள் இலஞ்சி ரோட்டில் முக்கூடல் பாலம் அருக நேற்று தகனம் செய்யப்பட்டது.தென்காசியில் நேற்றும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் ஓடின. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வன்முறை சம்பவங்கள் இல்லை. போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தென்காசியில் பாரதிய ஜனதா துணைத்தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறுகையில், அரசின் நடவடிக்கை இன்மைதான் கொலைகளுக்கு காரணம். தவறு செய்பவர்களுக்கு அரசு ஆதரவாக உள்ளது. உளவுபிரிவின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் சம்பவத்தைத் தடுத்திருக்கலாம்.' என்றார்.
Tuesday, August 14, 2007
தென்காசியில் கலவரம்: 6 பேர் படுகொலை கடைகள் அடைப்பு-பதட்டம்
ரு தரப்பினரிடையேயும் மோதல் போக்கு உருவானது. அவ்வப் போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த நிலையில் குமார் பாண்டியனின் தம்பி செந்தில், அவரது நண்பர் நடராஜன் வெட்டப்பட்டனர்.
இதையடுத்து எதிர் தரப்பை சேர்ந்த மைதீன் சேட்கான் என்பவர் வெட்டப்பட்டார்.
இவ்வாறு மோதல்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று நடந்த சண்டையில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். குமார் பாண்டியன் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர்கள் இன்று காலை 10 மணி அளவில் தென்காசி போலீஸ் நிலையத்துக்கு 2 மோட்டார் சைக்கிளில் சென்றனர். முத்தாரம்மன் கோவில் அருகே சென்றபோது எதிர்தரப்பை சேர்ந்த சிலர் காரில் வந்தனர்.
அரிவாள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இறங்கிய இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். அரிவாளால் சரமாரியாக வெட்டினர். வெடிகுண்டுகளை வீசினர். ஆனால் அது வெடிக்க வில்லை.
இதில் சம்பவ இடத்திலேயே அசன் கனி (35), ரவி, சேகர் (குமார் பாண்டியனின் தம்பி) ஆகிய 3 பேர் ரத்தவெள்ளத்தில் பிண மானார்கள். படுகாயம் அடைந்த நசீர் ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியில் இறந்தார். குமார் பாண்டியனின் தம்பி செந்தில், நாகூர்மீரான் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
மோதலில் சையது அலி (25), அப்துல்லா (30), அபு (27), ராஜா (36), மீரான் (26) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பாளை. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கர மோதலால் அப்பகுதி போர்க்களம் போல் காணப்பட்டது.
கடைகள் அடைக்கப்பட்டன வியாபாரிகளும், பொது மக்களும் பதறியடித்துக் கொண்டு ஓடினர். வீடுகளில் இருந்தனர்கள் கதவை பூட்டிக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அசம்பாதங்கள் ஏற்படாமல் இருக்க நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பஸ்-ஆட்டோக் களும் ஓடவில்லை. இதனால் வெளியூர் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
தென்காசி சம்பவத்தை தொடர்ந்து கடையநல்லூர் பகுதியிலும் பதட்ட மான சூழ்நிலை உரு வானது. அங்கும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் நெல்லை மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் நெல்லை மாவட்ட கலெக்டர் பிரகாஷ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் ஆகியோர் தென்காசி விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
Thursday, August 9, 2007
திருச்சி மண்டல ஆஃபீஸில் அறிமுகம் ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட்
அதைக்கண்டு 1999ல் பாஸ்போர்ட் அலுவலராக இருந்த ரவி, பாஸ்போர்ட் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பணியில், வேலையில்லாமல் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களை பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தினார். திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் 1999 முதல் பத்துக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய ரூ.20 மட்டும் கட்டணமாக பெற்று வந்தனர். மூன்று மாதம் முன் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலராக பாலச்சந்திரன் பொறுப்பேற்றார். "காலதாமதம் தான் லஞ்சத்துக்கு வழி வகுக்கிறது' என்பதை உணர்ந்த அவர், விண்ணப்பித்தவர்களுக்கு பாஸ்போர்ட் விரைவில் கிடைக்க வழி செய்தார்.
பாஸ்போர்ட் காலதாமதமின்றி கிடைத்ததால், அதற்காக லஞ்சம் கொடுத்து குறுக்கு வழியை தேடுவோரின் எண்ணிக்கை குறைந்தது.விண்ணப்பம் பூர்த்தி செய்யும் போது ஏற்படும் தேவையில்லாத செலவினம் குறைக்கவும், தினமும் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாகவும் நடவடிக்கை மேற்கொண்டார்.லாப்டாப் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களால் லாப்டாப் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன.
இந்தியாவில் முதன்முறையாக, திருச்சியில் தான் இத்தகைய புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இம்முறையால், திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும்; விண்ணப்பதாரர் இனி மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய ரூ. 50ஐ முன்னாள் ராணுவத்தினர் கட்டணமாக வசூலிக்கின்றனர். திருச்சியில் மூன்று நாட்களாக இரண்டு லாப்டாப் மூலம் விண்ணப்பங்களை ஆன்லைனில் முன்னாள் ராணுவத்தினர் பதிவு செய்து வருகின்றனர்.
லாப்டாப் மூலம் ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முன்னாள் ராணுவத்தினர், ""லாப் டாப்களை திறந்த வெளியில் வைத்து பதிவு செய்யும் பணி மேற்கொள்வதால், துசி, மழை, காற்று, வெயில் போன்றவைகளால் லாப்டாப் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இந்த இடத்தில் எங்களுக்கு பாதுகாப்பாக ஷெட் போட்டுக் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்,'' என்று கூறினர்.
கவனம் தேவை புதிய வைரஸ்
இந்த பேட்ச் பைலினை நீங்கள் செயல்படுத்தாவிட்டால் விரைவில் உங்கள் இமெயில் அக்கவுண்ட் தடுக்கப்பட்டு உங்கள் கட்டுப்பாட்டை இழக்கும் என்றும் எச்சரிக்கை விடப்படுகிறது. அந்த பேட்ச் பைலை நீங்கள் கம்ப்யூட்டரில் அமைத்தவுடன் அதன் வழியாக ட்ரோஜன் வைரஸ் ஒன்று கம்ப்யூட்டரில் விண்டோஸ் சிஸ்டம் போல்டரில் windev72b5203e.sys என்ற பெயரில் அழகாக அமர்ந்து கொள்கிறது. இதற்கு Trojan.Packed.13, W32/ Nuwar@MM, Worm:Win32/ Nuwar.JT மற்றும் Mal/DorfA என்ற பெயர்களும் தரப்படுகிறது. இது வழக்கம்போல உங்கள் முகவரி புக்கில் இருக்கிற வர்களுக்கு இந்த வைரஸை அனுப்புகிறது. உங்கள் இமெயில் அக்கவுண்ட் குறித்த தகவல்களை இந்த வைரஸ் அனுப்பியவர்களுக்கு அனுப்புகிறது. எனவே இது போன்ற எச்சரிக்கை இமெயிலில் வந்தால் அதை அலட்சியப் படுத்தி அழித்து விடுங்கள்.
Monday, August 6, 2007
திரவுபதி அம்மன் கோயில் நுழைவு போராட்டம்
இருதரப்பும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க ஒப்புக் கொண்டுள்ளோம். இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்ட ஆலய நுழைவு போராட்டம் ரத்து செய்யப்படுகிறது,'' என்றார். மேற்கு மண்டல செயலாளர் தமிழமுதன், ஆதவன், தமிழ்வேந்தன், ராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
Wednesday, August 1, 2007
கோவை குண்டு வெடிப்பு:
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி 13 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சங்கிலி தொடர் குண்டு வெடிப்பில் 58 பேர் உடல் சிதறி பலியானார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் படு காயம் அடைந்தனர்.இது தொடர்பாக அல்- உம்மா இயக்க தலைவர் பாட்சா, செயலாளர் அன்சாரி, கேரள மக்கம் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உம்பட 168 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் இறந்து விட்டார். ஒருவர் அப்ரூவராக மாறி விட்டார். இந்த வழக்கை விசாரிக்க தனிக் கோர்ட்டு அமைக்கப்பட்டது. பாதுகாப்பு நலன்கருதி கோவை மத்திய சிறை அருகே இருந்த நூலக கட்டிடமே தனிக்கோர்ட்டாக மாற்றப்பட்டு வழக்கு நடந்து வந்தது. இதையடுத்து அரசு தரப்பு, எதிர்தரப்பு வாதங்கள் நடந்து முடிந்தது. ஆகஸ்டு 1-ந்தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி உத்திராபதி அறிவித்தார். இதையொட்டி கோவை நகர், மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. காலை 9.45 மணி அளவில் 6 போலீஸ் வேன்கள் புடைசூழ பலத்த பாதுகாப்புடன் நீதிபதி உத்திராபதி தனிக்கோர்ட்டுக்கு வந்தார். கோர்ட்டுக்கு சென்றதும் காரை விட்டு இறங்கிய அவர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தனது அறைக்கு சென்றார். அவரைத் தொடர்ந்து அரசு, எதிர்தரப்பு வக்கீல்களும் சென்றனர். காலை 10.20 மணி முதல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அணி, அணியாக வந்தனர். 15 பேர், 15 பேராக அழைத்து வரப்பட்டனர். 10.30 மணிக்கு அவர்கள் மீதான குற்றச் சாட்டுகள் குறித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பு விவரம் வரு மாறு:-
முதல் குற்றவாளியான அல்உம்மா இயக்கத் தலைவர் பாட்சா மீது 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது. அதில் 2 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மதானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி அறிவித்தார். இதையடுத்து பத்து பத்து பேராக அழைத்து அவர்கள் மீதான குற்றங்கள் குறித்து எடுத்து கூறி குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். மதியம் 1-30 மணி அளவில் 102 பேர் ஆஜர்படுத்தப்பட்ட தில் மதானி தவிர மற்ற 101 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு
கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த பயங்கர சம்பவத்தில் 58 பேர் உடல் சிதறி பலியானார்கள். 250 பேர் படுகாய மடைந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தனியார் மற்றும் பொது சொத்துகள் சேதமடைந்தன. இச் சம்பவம் தொடர்பாக அல்உம்மா நிறுவனர் பாஷா, பொதுச் செயலர் அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி, மைசூர் வெடிமருந்து வியாபாரி ரியாசுர் ரகுமான் உள்ளிட்ட 168 பேர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை தனிக்கோர்ட்டில் நடந்து வந்தது. சாட்சிகள் விசாரணை முடிந்து, இரு தரப்பு வக்கீல்கள் விவாதம் நடந்து முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று தீர்ப்பு கூறப்படும் என்று தனி நீதிமன்றம் அறிவித்திருந்தது. குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் தீர்ப்பு கூறப்படுவதால் கோவை நகர் முழுவதும் இன்று ரெட் அலர்ட் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை முதலே நகரில் உச்சகட்ட டென்ஷன் நிலவியது.
கோவை பாலக்காடு சாலையில் மதுக்கரை அருகே சோதனைச்சாவடி அமைக்கப் பட்டு கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்துக்குள் நுழையும் வாகனங்கள் தீவிரமாக தணிக்கை செய்யப்பட்ட பின்னரே நகருக்குள் அனுமதிக்கப்பட்டன. மத ரீதியான பதற்றம் நிறைந்த உக்கடம், கோட்டை மேடு, என்.எச்., ரோடு, பிலால் எஸ்டேட், மஜீத்காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், போத்தனுõர் மற்றும் கெம்பட்டி காலனி, பூ மார்க்கெட், செல்வபுரம், சிவானந்தா காலனி, ரத்தினபுரி, குனியமுத்துõர், சுந்தராபுரம் பகுதிகளில் சிறப்பு காவல் படையினர் நேற்று இரவு முதலே ரோந்து சுற்றி வந்தனர். இதுதவிர மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், மத வழிபாட்டு தலங்கள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் விமான நிலையத்தில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. ஆங்காங்கே வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு, துப்பறியும் மோப்ப நாய் பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கோவை மத்திய சிறைக்கு அருகில் உள்ள தனிக் கோர்ட்டை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பலத்த பாதுகாப்புடன் தனிக்கோர்ட் நீதிபதி உத்ரபதி காலை 10 மணிக்கு கோர்ட்டுக்குள் வந்தார். வந்த உடனேயே அவர் குற்றவாளிகள் பட்டியலை அறிவிக்கத் தொடங்கினார். குற்றம் சாட்டப்பட்ட 168 பேரில் 153 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். 14வது குற்றவாளியாக இருந்த கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நசீர் மதானி உள்பட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் படாததால் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். மீதமுள்ள 7 பேரில் ஒருவர் ஏற்கனவே அப்ரூவர் ஆகி விட்டார். ஒருவர் சிறையில் இருந்தபோது உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். 5 பேருக்கு வரும் 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட அப்துல் நசீர் மதானி கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் ஆவார். மதானி விடுதலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் கேரளாவில் உள்ள தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். பாலக்காட்டில் பட்டாசுகள் வெடித்து மதானியின் விடுதலையை தொண்டர்கள் கொண்டாடினார்கள்.
Monday, July 30, 2007
மதுரை ஜெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இதைத்தொடர்ந்து ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பு, பழங்காநத்தம் போலீஸ் குடியிருப்பு, தெற்குவெளியில் உள்ள கிரைம் பிராஞ்ச், திடீர்நகர் போலீஸ் குடியிருப்பு பகுதிகளில் வெடிகுண்டு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு தீவிர சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இது வெறும் புரளி என்று தெரியவந்தது. இருப்பினும் போலீஸ் குடியிருப்பு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரை நகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 9.15 மணிக்கு ஒரு போன் வந்தது. அந்த போனில் பேசியவர் மதுரை ஜெயில் குடியிருப்பு பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்க இருக்கிறது. இதனால் ஏராளமானோர் பலியாவார்கள் என்று கூறிவிட்டு தனது போனை துண்டித்துவிட்டார். இந்த போன் மிரட்டல் பற்றி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி வெடிகுண்டு போலீஸ் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு வீடுகளில் இருந்தவர்களை உடனே வெளியேற்றி விட்டு வீடு, வீடாக தீவிர சோதனை மேற்கொண்டனர். வீடுகளின் அருகே உள்ள தோட்டப்பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் அங்கு வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. திட்டமிட்டு யாரோ வீண் வதந்தியை கிளப்பிவிட்டு இருப்பது தெரியவந்தது.
சிறுபான்மை மக்களுக்கு வாழ்வுரிமை பெற்று தருவது பா.ம.க. கடமையாகும்
சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் ஆதிதிராவிடர், தேவேந்திரர், அருந்ததியர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவது குறித்த மாநாடு நடத்தப்படுகிறது. முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு இல்லை. இதற்காக மத்திய அரசு அமைத்த சச்சார் கமிட்டி பரிந்துரைகளை மத்திய-மாநில அரசுகள் அமல் படுத்த வேண்டும். இவர்களின் வாழ்வுரிமைக்காக மாநாடு நடத்திய ஒரே தலைவர் டாக்டர் ராமதாஸ், ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி ஆகும். சிறுபான்மை மக்களுக்கு வாழ்வுரிமை பெற்று தருவது பாட்டாளி மக்கள் கட்சியின்கடமையாகும். இதற்காக வருகிற 25-ந்தேதி திருச்சியில் வாழ்வுரிமை மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு அரசியல் வரலாற்றிலேயே திருப்புமுனை மாநாடாக அமையும். இவ்வாறு ஜி.கே.மணி பேசினார்.
இந்த கூட்டத்தில் மாநில இணை பொது செயலாளர் மு.இசக்கி, மாநில நிர்வாகிகளான இளைஞர் சங்க செயலாளர் த.அறிவுச்செல்வன், மாணவர் சங்க தலைவர் கி.பாரிமோகன், மகளிர் சங்க துணை செயலாளர் செல்வி, இளைஞர் சங்க துணை செயலாளர் வே.செந்தில் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.
திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கா.முஸ்தபா, மேற்கு தலைவர் செ.சு.பார்த்தீபன், கிழக்கு தலைவர் முகமது அலி ஜின்னா, செயலாளர்கள் (மேற்கு) ரா.ஜான் ரஸ்கின், (தெற்கு) இளமாறன், (கிழக்கு) ரா.ச.சக்தி, முன்னாள் மாநில துணை தலைவர் கேசவ ராமலிங்கம், துணை பொது செயலாளர் ப.முத்து உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தொடக்கத்தில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் உறந்தை க.உமாநாத் வரவேற்று பேசினார். இறுதியில் தமிழக மாணவர் சங்க பொறுப்பாளர் ம.பிரின்ஸ் நன்றி கூறினார்.
நந்திகிராமில் மீண்டும் வன்முறை:
சில வார கால அமைதிக்கு பிறகு நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. நந்திகிராமில் ஒரு கால்வாய் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியினரும், விவசாயிகள் போராட்ட குழுவினரும் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சண்டையில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த 2 பேர் பலியானார்கள். இதற்கு பதிலடியாக, மற்றொரு இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இரண்டு பேரை மார்க்சிஸ்ட் கட்சியினர் துப்பாக்கியால் சுட்டனர். காயம் அடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, நந்திகிராமில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மண்டல கமிட்டி அலுவலகத்தை விவசாயிகள் போராட்ட குழுவினர் சூறையாடினர். அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதில் 50 பேர் காயம் அடைந்ததாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். மேலும், போலீஸ் தடியடியை கண்டித்து இன்று 12 மணி நேர பந்த்துக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, தங்கள் கட்சியை சேர்ந்த 3 பேரை விவசாயிகள் போராட்ட குழுவினர் கடத்தி சென்று விட்டதாக மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
Sunday, July 29, 2007
பாலஸ்தீனின் அவல நிலைக்கு ஆதாரக்காரணம்
மார்ச் மாதம் முதல் தேதி முதன் முதலில் மக்கள் மன்றம் என்றொரு அதிகாரபூர்வ அமைப்பை நிறுவினார்கள். யூதர்களின் தேசியக் கமிட்டியிலிருந்து இந்த மக்கள் மன்றத்துக்குப் பிரதிநிதிகளை நியமித்தார்கள். இந்த மக்கள் மன்றம்தான், இஸ்ரேல் உருவானதும் 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திட்டம் வகுத்தளித்தது.
இஸ்ரேலின் நாடாளுமன்றத்தை 'நெஸட்' (Knesset) என்று குறிப்பிடுவார்கள். ஹீப்ரு மொழியில் 'நெஸட்' என்றால் சட்டம் இயற்றும் இடம் என்று பொருள். இதற்கு நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். ஆரம்பகாலத்தில் நாடாளுமன்றத்துக்கு வானளாவிய அதிகாரங்கள் இருந்தன. கிட்டத் தட்ட மன்னராட்சி போலவே தோற்றமளிக்கும் படியான அதிகாரங்கள். பிறகு இந்த அதிகாரங்களில் கொஞ்சம் நீதிமன்றத்துக்குப் போனது. எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் பிரதம மந்திரியின் வசம் தஞ்சம் புகுந்தது.
ஒரு சம்பிரதாயத்துக்காக அதிபர் என்றொருவரை இஸ்ரேல் வைத்துக்கொள்வது வழக்கம். ஆனால் எந்த அதிகாரமும் அவருக்குக் கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பது தவிர! இஸ்ரேலில் ஒரு கட்சி ஆட்சி என்கிற வழக்கம் என்றைக்குமே இருந்ததில்லை. எப்போதும் ஜேஜே என்று குறைந்தது பதினைந்து இருபது கட்சிகளாவது சேர்ந்துதான் நாடாளுமன்றத்தை வழி நடத்தும். ஒரு கட்சி நாடாளுமன்றத் துக்குள் நுழையவேண்டுமென்றால், அதற்கு ஒரே ஒரு நிபந்தனை உண்டு. தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் குறைந்தபட்சம் 1.5 சதவிகிதமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அவ்வளவுதான்.
கூட்டணி அரசு என்றாலும் உறுதிமிக்க கூட்டணியாகத்தான் எப்போதும் இருக்கும். ஏனெனில் கட்சி வேறுபாடுகள் இருப்பினும் யூத இனம் என்கிற ஓரம்சத்தால் அனைவரும் ஒருங்கிணைந்தே செயல்படுவார் கள். இது அரசியலுக்கும் அப்பாற்பட்ட பிணைப்பு! நம் ஊரில் செய்வதுபோல நினைத்துக்கொண்டாற்போல் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து பிரதமரைக் கவிழ்ப்பதெல்லாம் இஸ்ரேலில் முடியாது. குடியரசுத் தலைவர் மாளிகை முன்னால் தர்ணா நடத்தினாலும் நடக்காது. அதிபரே விரும்பினாலும் பிரதமரை மாற்ற முடியாது! வேண்டுமானால் ஒன்று செய்யலாம். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து பிரதமரின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லையென்று நாடாளு மன்றத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கலாம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்கிற பாகுபாடுகள் ஏதுமில்லாமல் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து இந்தக் காரியத்தை ஆத்மசுத்தியுடன் செய்தால், பிரதமர் தனியாக நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்கப் போரடித்து தானாகவே ராஜினாமா செய்துவிட்டுப் போகலாம்!
இஸ்ரேலின் இந்த ஐம்பத்தெட்டு ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஒரே ஒரு முறைதான் இப்படி நடந்திருக்கிறது. 2000-வது வருடம் பிரதமராக இருந்த ஈஹுத் பாரக் (Ehud Barak) பல்வேறு அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு, விரட்டப் பட்டிருக்கிறார். மற்றபடி இஸ்ரேலில் ஒரு பிரதமரை மாற்றுவது என்பது, அமெரிக்காவில் அதிபரை மாற்றுவது எத்தனை சிரமமோ அத்தனை சிரமம். இம்மாதிரியான ஏற்பாடு எதற்காக என்றால், சர்வதேச அளவில் தன்னை யாரும் சரிவர அங்கீகரிக்காத நிலையில், உள்நாட்டிலும் எப்போதும் குழப்பம் சூழ்ந்தவண்ணமே இருந்துவிடக் கூடாதே என்பதற்காகத் தான். என்னதான் அமெரிக்கா ஆதரிக்கிறது என்றாலும் அக்கம்பக்கத்தில் தோழமையுடன் ஒரு புன்னகை செய்யக்கூட இஸ்ரேலுக்கு யாரும் கிடையாது. பெரும்பாலான ஆசிய தேசங்களும் இஸ்ரேலின் பாலஸ்தீன விரோத நடவடிக்கைகளை முன்னிட்டுத் தொடர்ந்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தபடியே தான் இருக்கின்றன. தனித்து நின்று போராடி வாழ்ந்தாக வேண்டிய நெருக்கடி இஸ்ரேலுக்குத் தொடக்ககாலம் முதலே இருந்து வருவதால், ஆட்சிமுறையில் இப்படியான சில இரும்புத்தனங்களைச் செய்துகொண்டார்கள். ஒருவரை பிரதமராகத் தேர்ந்தெடுத்து விட்டால், என்ன ஆனாலும் அவர் சொல்பேச்சு கேட்பது என்பதுதான் இஸ்ரேலியர்களின் இயல்பு. தவறு செய்கிறாரென்று தெரிந்தாலும் தமக்குள் பேசிக்கொள்வார்களே தவிர, பொதுவில் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள். அரசாங்கம் அங்கே மீடியாவை மிகவும் போஷாக்குடன் வைத்துக்கொள்வது வழக்கம். குறிப்பாகப் பத்திரிகைகள், நாளிதழ்கள். யூதப் பத்திரிகைகள் அங்கே இழுத்து மூடப்பட்டதாகச் சரித்திரமே கிடையாது. ஓடாத பத்திரிகைகள் கூட நூலக ஆர்டரின் பேரில் உயிர்வாழ்ந்துகொண்டுதான் இருக்கும். சுமார் 25 தினசரிப் பத்திரிகைகள் இஸ்ரேலில் இருக்கின்றன. அவற்றுள் 11 ஹீப்ரு மொழிப் பத்திரிகைகள். நான்கு அரபுமொழிப் பத்திரிகைகள். ஆங்கிலம், பிரெஞ்சு, ஹங்கேரியன், ருமேனியன், ரஷ்யன், ஜெர்மன் மொழிப் பத்திரிகைகள் தலா ஒன்று.
பெரும்பாலும் ஐரோப்பிய தேசங்களிலிருந்து வந்து இஸ்ரேலில் வாழத் தொடங்கிய யூதர்கள்தான் என்பதால், அந்தந்த தேசத்து மொழிகளில் ஒரு பத்திரிகையாவது இருக்கவேண்டு மென்று திட்டமிட்டு, இஸ்ரேல் அரசாங்கமே உதவி செய்து ஆரம்பித்துவைத்த பத்திரிகைகள் இவை. ஹீப்ரு மொழியின் சிதைந்த பேச்சு வழக்கு மொழியான இட்டிஷ் மொழியிலும் ஒரு தினசரிப் பத்திரிகை உண்டு.
தேசம் உருவான தினம் முதல் இன்றுவரை இஸ்ரேலில், அரசுக்கும் பத்திரிகைகளுக்குமான உறவு மிக அற்புதமான நிலையிலேயே இருந்துவருவது ஓர் உலக ஆச்சர்யம். எந்த ஒரு இஸ்ரேல் தினசரியும் அரசைக் கடுமையாக விமர்சிக்காது. அதே சமயம் கட்சிப் பத்திரிகை போலத் துதி பாடுவதும் கிடையாது. செய்தியை, செய்தியாக மட்டுமே வழங்குவது என்பது இஸ்ரேல் பத்திரிகைகளின் பாணி. தன் விமர்சனம் என்று எதையும் அவை முன்வைப்பதே இல்லை பெரும்பாலும்! Yedioth Aharonoth என்கிற ஹீப்ரு மொழி செய்தித்தாள்தான் இஸ்ரேலில் மிக அதிகம் விற்பனையாகும் பத்திரிகை. மொத்தம் மூன்று லட்சம் பிரதிகள்.
பத்திரிகைகளுக்கும் அரசுக்கும் மட்டுமல்ல; பத்திரிகைகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் கூட அங்கே மிக நல்ல உறவு உண்டு. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்று இதுவரை எந்தப் பத்திரிகை மீதும் எந்தக் காலத்திலும் யாரும் தொடுத்ததில்லை.
அடுத்தபடியாக இஸ்ரேல் ராணுவம். ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேர் கொண்ட முதல்நிலைப் படை. நான்கு லட்சத்து முப்பதாயிரம் பேர் கொண்ட ரிசர்வ் ராணுவப்படை. விமானப்படையில் முப்பத்திரண்டாயிரம் பேர். கப்பல் படையில் பத்தாயிரம் பேர். இன்றைய தேதியில் வெளியில் தெரிந்த இஸ்ரேல் ராணுவத்தின் பலம் இதுதான். ஆனால் சரித்திரத்தைப் புரட்டிப்பார்த்தால் 1957 முதலே அவர்களிடம் இதே பலம்தான் இருந்து வந்திருக்கிறது என்பது புலப்படும். ஆள்பலம் குறைவானாலும் இஸ்ரேல் தன் வீரர்களுக்கு அளிக்கும் பயிற்சிகள் பிரும்மாண்டமானவை. உலகெங்கும் எங்கெல்லாம் மிகச்சிறந்த பயிற்சிகள் வழங்கப்ப டுகிறதோ, அங்கெல்லாம் தனது படையினரை அனுப்பி, தொடக்க காலத்தில் போர்ப்பயிற்சி அளித்திருக்கிறார்கள். பின்னால் இஸ்ரேலே பல தேசங்களுக்குப் பயிற்சியளிக்கும் அளவுக்கு ராணுவத் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற தேசமாகிவிட்டது. இது விஷயத்தில் அமெரிக்காவின் உதவி மிகவும் குறிப்பிடப்படவேண்டியதொரு அம்சமாகும்.
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆயுதங்களை மட்டும் வழங்கவில்லை. மாறாக அவற்றைப் பயன்படுத்துவதில் பயிற்சி, போர்க்காலங்களைச் சமாளிக்கும் நிர்வாகத் திறன் பயிற்சி, ஒற்றறியும் கலையில் பயிற்சி, உளவு நிறுவனங்களை அமைத்து, கட்டிக்காத்து, வழிநடத்துவதற்கான பயிற்சி என்று பார்த்துப் பார்த்துச் சொல்லிக்கொடுத்திருக்கிறது. இஸ்ரேல் தன் பங்குக்குத் தொழில் நுட்பத்துறையில் அடைந்த அபரிமிதமான வளர்ச்சி, அத்தேசத்தின் ஆயுத பலத்தை மிகவும் நவீனப்படுத்தியது.
அமெரிக்காவுக்கு ஒரு சி.ஐ.ஏ. மாதிரி இஸ்ரேலுக்கு ஒரு மொஸாட். உலகின் மூன்றாவது மிகப்பெரிய உளவு நிறுவனம் என்று சொல்லப்படும் மொஸாட், இஸ்ரேலின் இரண்டாவது அரசாங்கம். நிழல் அரசாங்கம். இத்தனை வலுவான பின்னணியை வைத்துக்கொண்டிருந்தாலும் இஸ்ரேலின் பலம் இவை எதுவுமே இல்லை. மாறாக, யூதர்கள் என்று இனத்தால் தாங்கள் ஒன்றுபட்டவர்கள் என்கிற பெருமித நினைவுதான் இஸ்ரேலை இன்றளவும் உயிர்பிழைக்க வைத்துக்கொண்டிருக்கிறது.
இன்றுவரை ஆதரிக்கும் அமெரிக்கா, நாளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உலகமே திரண்டு இஸ்ரேலை எதிர்க்கலாம். மீண்டும் அவர்கள் ஊர் ஊராக ஓட வேண்டி நேரலாம். என்ன ஆனாலும் இஸ்ரேல் மக்களை முற்றிலுமாக அழித்துவிடவே முடியாது. இன்னும் ஆயிரம் ஹிட்லர்கள் தோன்றினாலும் முடியாது. காரணம், யூதர்களின் ஒற்றுமை அப்படிப்பட்டது. எந்தக் காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். எத்தனை கஷ்டம் வந்தாலும் தாங்கிக்கொண்டு சந்தர்ப்பம் பார்த்துத் திருப்பியடிக்கத் தெரியும் அவர்களுக்கு.
இதுதான், இது ஒன்றுதான். இந்த ஒற்றுமை அரேபியர்களிடம் இல்லாததுதான் பாலஸ்தீனின் அவல நிலைக்கு ஆதாரக் காரணம்.
பாலஸ்தீன் அரேபியர்களுக்காகப் பரிதாபப்படலாம், கண்ணீர் சிந்தலாம். கவலை தெரிவிக்கலாமே தவிர, யாராலும் உருப்படியாக எந்த உதவியும் செய்யமுடியாமல் இருப்பதற்குக் காரணம் இதுதான். அரபுக்களிடையே ஒற்றுமை கிடையாது.
இது இஸ்ரேலுக்கு மிக நன்றாகத் தெரியும். அவர்களின் ஒற்றுமைக் குறைபாடு உயிருடன் இருக்கும் வரை தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்பதை யூதர்கள் அறிவார்கள்.
Thursday, July 26, 2007
வரலாறு மன்னிக்காது!
அண்மையில் நடைபெற்ற மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில், 1 லட்சத்து 17,190 வாக்குகள் பதிவாகியது. நேற்று தொடங்கப்பட்ட தே.மு.தி.க. பெற்ற வாக்குகள் : 21,272 (மூன்றாவது இடம்). ஆனால், தலித்துகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ‘புதிய தமிழகம்' கட்சி பெற்றிருக்கும் வாக்குகள் 175. இதன் மூலம் தலித்துகள் என்ன சாதிக்க முடியும்? தேர்தல் அரசியல் கிரிமினல்மயமாகி/ஜாதிமயமாகி/லஞ்சமயமாகி விட்டது என்றெல்லாம் வாதிடலாம். அதில் ஒடுக்கப்பட்ட மக்களின் பங்கு என்னவாக இருக்கப் போகிறது? ‘புதிய தமிழகம்' எந்த தலித் செயல்திட்டத்தை இத்தேர்தலில் முன்னிறுத்தியது? இதுபோன்ற படுதோல்விகளுக்குப் பிறகும், மீண்டும் மீண்டும் தேர்தல் அரசியலைதான் - ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தீர்வாக இவர்கள் முன்வைக்கிறார்கள். இதுகுறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டிய தருணமிது.
நன்றி:
Tuesday, July 24, 2007
கொள்கை மாறா மறவனே..!
மார்க்கத்தால் இஸ்லாமியன்
இனத்தால் திராவிடன்
மொழியால் தமிழன்
தேசத்தால் இந்தியன், எனும் புரட்சிமிகு சிந்தனையை இஸ்லாமியர்களின் நெஞ்சத்தில் விதைத்தார்.
தலித் இன சமூக மக்களின் விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை தனது வரலாற்று உரைகளின் மூலம் இஸ்லாமியர் சமூகத்திற்கு அடையாளம் காட்டியவர் பழனிபாபா அவர்கள் ஒருவராகத்தான் இருக்க முடியும். அம்பேத்கார் அவர்களை ஏற்றுக் கொள்ளாத அரசியல் கட்சியை அடியோடு புறக்கணித்து விடு என ஒரு புதிய பாதையை அரசியல் களத்திலே வகுத்து தந்தவர்.
சிம்மாசனங்கள் அவரை சிறைபடுத்திய போதும் சீரான என் மார்க்கத்தை விட்டு சிறிதளவும் பிரளமாட்டேன் என்று வெற்றிக்கும் வீர மரணத்திற்கும் இடையே போராடி ஓய்ந்த வேங்கை மனிதன் தான் பழனிபாபா.
சொல்லாலும், செயலாலும், புறத்தாலும், அகத்தாலும், தியாக உணர்வு ஒன்றையே நிலைப்படுத்தினார். இஸ்லாம் எனும் கட்டிடம் தியாகம் எனும் அஸ்திவாரத்தினால் உருப் பெற்றது என உலகுக்கு உணர்த்தினார். இஸ்லாமிய சமூகத்திற்குள் அனேக அரசியல் பிரிவுகள் இருக்கலாம் ஆனால், இஸ்லாமியர்கள் மத்தியில் பிளவுகளே இருக்கக்கூடாது, முடியாது என மேடைக்கு மேடை தனது சொற்பொழிவால் பிரகடணப்படுத்தினார்.
இன்றைய காலகட்டத்தில் பாபா அவர்கள் இருந்திருக்கக்கூடாதா..? என உணர்ச்சிமிக்க இளைஞர்கள் பலர் வெளிப்படையாகவே வருத்தமுறுவதை செவியுறும்போது பாபா அவர்கள் வகுத்துத்தந்த பாதையே இருதித் தீர்வாக இருக்க முடியும் என அறியமுடிகிறது.
ஷஹீத் பழனிபாபா..
எம். ஜி. ஆர். ஆட்சிக்காலத்தில் முதன்முறையாக சென்னைக் கோட்டைக்குள் நுழையத் தடை என அரசானை வெளியானவுடன் தான் யார் இந்த பழனிபாபா என்று மக்கள் பார்க்கத் தொடங்கினார்கள். இந்த சந்தர்பத்தை பயன் படுத்திக்கொண்ட திமுக பாபா அவர்கள் மூலம் எம்.ஜி.ஆரை வசைபாட மேடை அமைத்துத் தந்தது.
எம். ஜி. ஆர். மறைவுக்குப்பின் ஆட்சியமர்ந்த திமுக, இந்து மேல் ஜாதி சமூகத்தினரின் வெறுப்பை சம்பாதித்து கொள்ள விரும்பாத கலைஞர் அரசு பாபா அவர்களின் மேல் முதன்முறையாக குண்டர் சட்டத்தை பிரயோகித்து சிறைக்குள் தள்ளியது.
திமுக அரசும் தனது முதுகில் குத்திய போது பாபாவின் சமுதாய பார்வை புதியபாதை காண வைத்தது. அரசியல் கலந்த சமுதாயப்பேச்சு தமிழகமெங்கும் அவருக்கு ஆதரவா ளர்களை பெற்றுத் தந்தது. அவரது நடவடிக்கைகள் அவரை பல வழக்குகளில் சிக்க வைத்தது. தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA), கொடிய தடாசட்டம் ஆகியவைகளும் அவரை பதம் பார்த்தன.
முன்னாள் குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமன் அவர்களின் பதவிக்காலத்தில் அரசு பணத்தில் திருப்பதி கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்த மொத்த செலவினத்தையும் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது பலரது புருவத்தையும் உயர்த்த வைத்தது.
பின்தொடர்ந்தோர் சிறிது காலம் மருகி நின்றபோதும் பழனிபாபா அவர்கள் மனம் தளரவில்லை. தனது இருதிக்காலம் வரையிலும் பாட்டாளி மக்கள் கட்சியுடனும், கட்சியின் தலைவர்களுடனும் மணம் இணைந்து ஜிஹாத் கமிட்டியை அரசியல் ஈடுபாட்டோடு வழி நடத்திச் சென்றார். இஸ்லாமிய மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கான போராட்டத்திற்கு அல்லாஹ்வின் பாதையில் அணி திரட்டினார். இந்த காலகட்டத்தில் தான் மதவெறி சக்திகளுக்கு பழியாகிய பாபா, 1997 ஜனவரி 28ஆம் நாள் (ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் முதல்நாள்) இரவு ஒன்பதரை மணிக்கு தனது வாகனமான ஜீப்பில் அமர்ந்திருந்த பாபா அவர்களை 6 பேர் கொண்ட கொலைவெறி கும்பலால் வெட்டப்பட்டு ஷஹீதானார்கள். (இன்னாலில்லாஹி..,)
பாபா அவர்களின் காலத்தில் தனது வீரவுரைகளில் ஒன்றை மட்டும் அடிக்கடி வலியுறுத்துவார், 'இஸ்லாமியர்களின் வெற்றி ஒற்றுமையில் தான் உள்ளது, வேற்றுமையில் அல்ல' என்பார். மாற்று மதச் சகோதரர்களின் அமைப்புகள் துணிந்த அளவு கூட நமது சமுதாயத்தின் அமைப்புகள் எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை.
அவர் கூறிய தத்துவத்தை உள்வாங்கி இயக்கங்கள் மூலம் உண்டான பிணக்குகளை களைந்து இஸ்லாமிய சமூகத்தின் வெற்றிக்கு அல்லாஹ்வின் பாதையில் அயராது உழைப்போம் என உறுதி ஏற்போம்.

