விடுதலை சிறுத்தை அமைப்பு பொதுச்செயலாளர் திருமாவளவன் தலைமையில், கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோயிலில் இன்று ஆலய நுழைவு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இது குறித்து மாவட்ட செயலாளர் இமயவரம்பன் கூறுகையில், ""திரவுபதி அம்மன் கோயில் தொடர்பான வழக்கு சேலம் உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருதரப்பும் நுழைய முடியாதபடி கோயிலுக்கு "சீல்' வைக்கப்பட்டுள்ளது.
இருதரப்பும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க ஒப்புக் கொண்டுள்ளோம். இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்ட ஆலய நுழைவு போராட்டம் ரத்து செய்யப்படுகிறது,'' என்றார். மேற்கு மண்டல செயலாளர் தமிழமுதன், ஆதவன், தமிழ்வேந்தன், ராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
இருதரப்பும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க ஒப்புக் கொண்டுள்ளோம். இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்ட ஆலய நுழைவு போராட்டம் ரத்து செய்யப்படுகிறது,'' என்றார். மேற்கு மண்டல செயலாளர் தமிழமுதன், ஆதவன், தமிழ்வேந்தன், ராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment