மதுரை ஆயுதப்படை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் அதிகாலை ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் மதுரையில் உள்ள போலீஸ் குடியிருப்புகளில் வெடி குண்டுகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்க உள்ளது என்றும் கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். இது பற்றிய தகவல் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பு, பழங்காநத்தம் போலீஸ் குடியிருப்பு, தெற்குவெளியில் உள்ள கிரைம் பிராஞ்ச், திடீர்நகர் போலீஸ் குடியிருப்பு பகுதிகளில் வெடிகுண்டு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு தீவிர சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இது வெறும் புரளி என்று தெரியவந்தது. இருப்பினும் போலீஸ் குடியிருப்பு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரை நகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 9.15 மணிக்கு ஒரு போன் வந்தது. அந்த போனில் பேசியவர் மதுரை ஜெயில் குடியிருப்பு பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்க இருக்கிறது. இதனால் ஏராளமானோர் பலியாவார்கள் என்று கூறிவிட்டு தனது போனை துண்டித்துவிட்டார். இந்த போன் மிரட்டல் பற்றி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி வெடிகுண்டு போலீஸ் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு வீடுகளில் இருந்தவர்களை உடனே வெளியேற்றி விட்டு வீடு, வீடாக தீவிர சோதனை மேற்கொண்டனர். வீடுகளின் அருகே உள்ள தோட்டப்பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் அங்கு வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. திட்டமிட்டு யாரோ வீண் வதந்தியை கிளப்பிவிட்டு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பு, பழங்காநத்தம் போலீஸ் குடியிருப்பு, தெற்குவெளியில் உள்ள கிரைம் பிராஞ்ச், திடீர்நகர் போலீஸ் குடியிருப்பு பகுதிகளில் வெடிகுண்டு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு தீவிர சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இது வெறும் புரளி என்று தெரியவந்தது. இருப்பினும் போலீஸ் குடியிருப்பு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரை நகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 9.15 மணிக்கு ஒரு போன் வந்தது. அந்த போனில் பேசியவர் மதுரை ஜெயில் குடியிருப்பு பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்க இருக்கிறது. இதனால் ஏராளமானோர் பலியாவார்கள் என்று கூறிவிட்டு தனது போனை துண்டித்துவிட்டார். இந்த போன் மிரட்டல் பற்றி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி வெடிகுண்டு போலீஸ் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு வீடுகளில் இருந்தவர்களை உடனே வெளியேற்றி விட்டு வீடு, வீடாக தீவிர சோதனை மேற்கொண்டனர். வீடுகளின் அருகே உள்ள தோட்டப்பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் அங்கு வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. திட்டமிட்டு யாரோ வீண் வதந்தியை கிளப்பிவிட்டு இருப்பது தெரியவந்தது.
No comments:
Post a Comment