Monday, November 5, 2007

பிஜி பிரதமரை கொல்ல ராணுவம் சதி - 11 பேர் கைது

தெற்கு பசிபிக்கடல் பகுதியில் உள்ள நாடு பிஜி. ஏராளமான இந்தியர்களும் இங்கு வசிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு அரசியல் நெருக்கடிகள் தொடருகிறது.
இப்போது அங்கு பிரத மராக இருப்பவர் பிராங்க் பைனிமராமா. 2006-ம் ஆண்டு புரட்சி நடத்தி இவர் ஆட்சியை கைப்பற்றினார். 2009-ம் ஆண்டு அங்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்து இருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் பைனிமராமாவை கொலை செய்யபயங்கர சதிதிட்டம் நடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் உள்ள சில அதி காரர்களும் இந்தசதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையொட்டி ராணுவ அதிகாரிகள், வீரர்கள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நியூசிலாந்து நாட்டவர் ஒருவர் இதில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில் பிஜி தீவில் 4 முறை புரட்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

No comments: