19 பேர் படுகொலை: போலீசாரே போராட்டத்தில் இறங்கியதால், நகரில் சட்டம் ஒழுங்கு மேலும் மோசமடைந்தது; பல இடங்களில் முஸ்லிம் இளைஞர்கள் குறி வைத்து தாக்கப்பட்டனர். அப்போது, அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கான்ஸ்டபிள் செல்வராஜ் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த தி.மு.க.,முன்னாள் எம்.எல்.ஏ., சி.டி.,தண்டபாணியின் கார் எரிக்கப்பட்டது; அவரும் தாக்கப்பட்டார். நகரின் பல இடங்களில் நடந்த வன்முறையில் வெட்டுப்பட்டு பலத்த காயத்துடன், சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை ஒரு கும்பல் தீ வைத்து கொளுத்தியது; அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரையும் மீறி, இச்சம்பவம் நடந்தது. இது போன்று மேலும் பல இடங்களில் நடந்த தாக்குதலில், 19 பேர் கொலை செய்யப்பட்டனர். வர்த்தக மற்றும் வியாபார நிறுவனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இச்சம்பவம் தமிழக வரலாற்றில் கரும்புள்ளியாக அமைந்தது. கொலை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் இறுதி ஊர்வலத்தில் "அல்உம்மா'வினர், பங்கேற்றனர்,
Monday, August 27, 2007
கோவை குண்டு வெடிப்பு - நடந்தது என்ன? - 1
கடந்த 1997, நவ.,29. "அல்உம்மா'வினர் மூவர், கோவை உக்கடம் வழியாக பைக்கில் சென்றனர். அங்கு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார் ஒரு போலீஸ்காரர்; மூவரையும், அவர் பெரியகடைவீதி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார். இவர்களை மீட்க ஆதரவாளர்களுடன் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார் அல்உம்மா பொதுச் செயலாளர் அன்சாரி. அப்போது அங்கிருந்த எஸ்.ஐ.,க்கும் அன்சாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிடிபட்ட மூவரையும் விடுவிக்க இயலாது என போலீசார் கூறியதை தொடர்ந்து, அன்சாரியும் ஆதரவாளர்களும் அங்கிருந்து கோபத்துடன் கிளம்பிச் சென்றனர். அடுத்த சில நிமிடங்களில் பயங்கர ஆயுதங்களுடன் உக்கடம் பகுதிக்கு வந்த "அல்உம்மா'வினர், அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் செல்வராஜை, சரமாரியாக வெட்டிக்கொன்றனர். இதையடுத்து, கோவை நகர் முழுவதும் பயங்கர கலவரம் மூண்டது. உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த நடைபாதை கடைகள், வியாபார நிறுவனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. நகரமே வன்முறை காடாக மாறியது; மறுநாளும் கலவரம் தொடர்ந்தது. போலீஸ்காரர் கொலை செய்யப்பட்டதால், அதிர்ச்சியடைந்த போலீசாரில் ஒரு பகுதியினர், நவ., 30 காலையில் ஸ்டேட் பாங்க் ரோடு திருச்சி ரோடு சந்திப்பில் "திடீர்' சாலை மறியலில் ஈடுபட்டனர்; தமிழக வரலாற்றில் போலீசார் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட சம்பவமும் அன்று அரங்கேறியது.
Thursday, August 16, 2007
தென்காசியில் இயல்பு வாழ்க்கை இரண்டாவது நாளாக பாதிப்பு
கோஷ்டி மோதலில் ஆறு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட தென்காசியில், நேற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென்காசியில் காசி விஸ்வநாதசுவாமி கோவில் எதிரே இடம் வாங்கி, முஸ்லிம்கள், மசூதி ஏற்படுத்தி வழிபாடு நடத்துகின்றனர். இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இந்து முன்னணி குமார்பாண்டியன் வெட்டிக்கொல்லப்பட்டார். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக மைதீன்சேட்கான் வெட்டப் பட்டார். பழிவாங்கும் நடவடிக்கையால் பல வன்முறை சம்பவங்கள் நடந்தன. தென்காசி கூலக்கடை பஜாரில் இருதரப்பும் நேருக்கு நேராக நேற்று முன்தினம் மோதியதில் ஆறு பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்ட பஷீர், அசன்கனி, நாகூர்மீரான் உடல்கள் நேற்று முன்தினம் இரவில் அடக்கம் செய்யப்பட்டன. குமார்பாண்டியனின் சகோதரர்கள் செந்தில், சுரேஷ், சேகர் ஆகியோரது உடல்கள் இலஞ்சி ரோட்டில் முக்கூடல் பாலம் அருக நேற்று தகனம் செய்யப்பட்டது.தென்காசியில் நேற்றும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் ஓடின. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வன்முறை சம்பவங்கள் இல்லை. போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். தென்காசியில் பாரதிய ஜனதா துணைத்தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறுகையில், அரசின் நடவடிக்கை இன்மைதான் கொலைகளுக்கு காரணம். தவறு செய்பவர்களுக்கு அரசு ஆதரவாக உள்ளது. உளவுபிரிவின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் சம்பவத்தைத் தடுத்திருக்கலாம்.' என்றார்.
Tuesday, August 14, 2007
தென்காசியில் கலவரம்: 6 பேர் படுகொலை கடைகள் அடைப்பு-பதட்டம்
இன்று காலை 10 மணிக்கு நடந்த இந்த பயங்கர சம்பவம் நெல்லை மாவட்டம் தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்து கோவில் அருகே மசூதி கட்டக்கூடாது என்று அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதையடுத்து ஒரு முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் அவரை வெட்டி கொன்றனர்.
ரு தரப்பினரிடையேயும் மோதல் போக்கு உருவானது. அவ்வப் போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த நிலையில் குமார் பாண்டியனின் தம்பி செந்தில், அவரது நண்பர் நடராஜன் வெட்டப்பட்டனர்.
இதையடுத்து எதிர் தரப்பை சேர்ந்த மைதீன் சேட்கான் என்பவர் வெட்டப்பட்டார்.
இவ்வாறு மோதல்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று நடந்த சண்டையில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். குமார் பாண்டியன் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர்கள் இன்று காலை 10 மணி அளவில் தென்காசி போலீஸ் நிலையத்துக்கு 2 மோட்டார் சைக்கிளில் சென்றனர். முத்தாரம்மன் கோவில் அருகே சென்றபோது எதிர்தரப்பை சேர்ந்த சிலர் காரில் வந்தனர்.
அரிவாள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இறங்கிய இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். அரிவாளால் சரமாரியாக வெட்டினர். வெடிகுண்டுகளை வீசினர். ஆனால் அது வெடிக்க வில்லை.
இதில் சம்பவ இடத்திலேயே அசன் கனி (35), ரவி, சேகர் (குமார் பாண்டியனின் தம்பி) ஆகிய 3 பேர் ரத்தவெள்ளத்தில் பிண மானார்கள். படுகாயம் அடைந்த நசீர் ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியில் இறந்தார். குமார் பாண்டியனின் தம்பி செந்தில், நாகூர்மீரான் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
மோதலில் சையது அலி (25), அப்துல்லா (30), அபு (27), ராஜா (36), மீரான் (26) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பாளை. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கர மோதலால் அப்பகுதி போர்க்களம் போல் காணப்பட்டது.
கடைகள் அடைக்கப்பட்டன வியாபாரிகளும், பொது மக்களும் பதறியடித்துக் கொண்டு ஓடினர். வீடுகளில் இருந்தனர்கள் கதவை பூட்டிக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அசம்பாதங்கள் ஏற்படாமல் இருக்க நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பஸ்-ஆட்டோக் களும் ஓடவில்லை. இதனால் வெளியூர் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
தென்காசி சம்பவத்தை தொடர்ந்து கடையநல்லூர் பகுதியிலும் பதட்ட மான சூழ்நிலை உரு வானது. அங்கும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் நெல்லை மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் நெல்லை மாவட்ட கலெக்டர் பிரகாஷ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் ஆகியோர் தென்காசி விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
ரு தரப்பினரிடையேயும் மோதல் போக்கு உருவானது. அவ்வப் போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த நிலையில் குமார் பாண்டியனின் தம்பி செந்தில், அவரது நண்பர் நடராஜன் வெட்டப்பட்டனர்.
இதையடுத்து எதிர் தரப்பை சேர்ந்த மைதீன் சேட்கான் என்பவர் வெட்டப்பட்டார்.
இவ்வாறு மோதல்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று நடந்த சண்டையில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். குமார் பாண்டியன் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர்கள் இன்று காலை 10 மணி அளவில் தென்காசி போலீஸ் நிலையத்துக்கு 2 மோட்டார் சைக்கிளில் சென்றனர். முத்தாரம்மன் கோவில் அருகே சென்றபோது எதிர்தரப்பை சேர்ந்த சிலர் காரில் வந்தனர்.
அரிவாள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இறங்கிய இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். அரிவாளால் சரமாரியாக வெட்டினர். வெடிகுண்டுகளை வீசினர். ஆனால் அது வெடிக்க வில்லை.
இதில் சம்பவ இடத்திலேயே அசன் கனி (35), ரவி, சேகர் (குமார் பாண்டியனின் தம்பி) ஆகிய 3 பேர் ரத்தவெள்ளத்தில் பிண மானார்கள். படுகாயம் அடைந்த நசீர் ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியில் இறந்தார். குமார் பாண்டியனின் தம்பி செந்தில், நாகூர்மீரான் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
மோதலில் சையது அலி (25), அப்துல்லா (30), அபு (27), ராஜா (36), மீரான் (26) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பாளை. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கர மோதலால் அப்பகுதி போர்க்களம் போல் காணப்பட்டது.
கடைகள் அடைக்கப்பட்டன வியாபாரிகளும், பொது மக்களும் பதறியடித்துக் கொண்டு ஓடினர். வீடுகளில் இருந்தனர்கள் கதவை பூட்டிக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அசம்பாதங்கள் ஏற்படாமல் இருக்க நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பஸ்-ஆட்டோக் களும் ஓடவில்லை. இதனால் வெளியூர் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
தென்காசி சம்பவத்தை தொடர்ந்து கடையநல்லூர் பகுதியிலும் பதட்ட மான சூழ்நிலை உரு வானது. அங்கும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் நெல்லை மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் நெல்லை மாவட்ட கலெக்டர் பிரகாஷ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் ஆகியோர் தென்காசி விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
நன்றி: மாலைமலர்
Thursday, August 9, 2007
திருச்சி மண்டல ஆஃபீஸில் அறிமுகம் ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட்
திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 16 மாவட்டங்கள் உள்ளன. பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அதனால் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கூட்டநெரிசல் என்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. புரோக்கர்களின் தொல்லையும் தவிர்க்க முடியாதாக இருந்து வந்தது.பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வருபவர்கள், விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய விவரம் தெரியாமல் புரோக்கர்களிடம் பணத்தை இழந்து வந்தனர்.
அதைக்கண்டு 1999ல் பாஸ்போர்ட் அலுவலராக இருந்த ரவி, பாஸ்போர்ட் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பணியில், வேலையில்லாமல் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களை பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தினார். திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் 1999 முதல் பத்துக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய ரூ.20 மட்டும் கட்டணமாக பெற்று வந்தனர். மூன்று மாதம் முன் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலராக பாலச்சந்திரன் பொறுப்பேற்றார். "காலதாமதம் தான் லஞ்சத்துக்கு வழி வகுக்கிறது' என்பதை உணர்ந்த அவர், விண்ணப்பித்தவர்களுக்கு பாஸ்போர்ட் விரைவில் கிடைக்க வழி செய்தார்.
பாஸ்போர்ட் காலதாமதமின்றி கிடைத்ததால், அதற்காக லஞ்சம் கொடுத்து குறுக்கு வழியை தேடுவோரின் எண்ணிக்கை குறைந்தது.விண்ணப்பம் பூர்த்தி செய்யும் போது ஏற்படும் தேவையில்லாத செலவினம் குறைக்கவும், தினமும் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாகவும் நடவடிக்கை மேற்கொண்டார்.லாப்டாப் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களால் லாப்டாப் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன.
இந்தியாவில் முதன்முறையாக, திருச்சியில் தான் இத்தகைய புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இம்முறையால், திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும்; விண்ணப்பதாரர் இனி மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய ரூ. 50ஐ முன்னாள் ராணுவத்தினர் கட்டணமாக வசூலிக்கின்றனர். திருச்சியில் மூன்று நாட்களாக இரண்டு லாப்டாப் மூலம் விண்ணப்பங்களை ஆன்லைனில் முன்னாள் ராணுவத்தினர் பதிவு செய்து வருகின்றனர்.
லாப்டாப் மூலம் ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முன்னாள் ராணுவத்தினர், ""லாப் டாப்களை திறந்த வெளியில் வைத்து பதிவு செய்யும் பணி மேற்கொள்வதால், துசி, மழை, காற்று, வெயில் போன்றவைகளால் லாப்டாப் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இந்த இடத்தில் எங்களுக்கு பாதுகாப்பாக ஷெட் போட்டுக் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்,'' என்று கூறினர்.
அதைக்கண்டு 1999ல் பாஸ்போர்ட் அலுவலராக இருந்த ரவி, பாஸ்போர்ட் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பணியில், வேலையில்லாமல் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களை பயன்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தினார். திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் 1999 முதல் பத்துக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய ரூ.20 மட்டும் கட்டணமாக பெற்று வந்தனர். மூன்று மாதம் முன் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலராக பாலச்சந்திரன் பொறுப்பேற்றார். "காலதாமதம் தான் லஞ்சத்துக்கு வழி வகுக்கிறது' என்பதை உணர்ந்த அவர், விண்ணப்பித்தவர்களுக்கு பாஸ்போர்ட் விரைவில் கிடைக்க வழி செய்தார்.
பாஸ்போர்ட் காலதாமதமின்றி கிடைத்ததால், அதற்காக லஞ்சம் கொடுத்து குறுக்கு வழியை தேடுவோரின் எண்ணிக்கை குறைந்தது.விண்ணப்பம் பூர்த்தி செய்யும் போது ஏற்படும் தேவையில்லாத செலவினம் குறைக்கவும், தினமும் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாகவும் நடவடிக்கை மேற்கொண்டார்.லாப்டாப் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களால் லாப்டாப் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன.
இந்தியாவில் முதன்முறையாக, திருச்சியில் தான் இத்தகைய புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இம்முறையால், திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும்; விண்ணப்பதாரர் இனி மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியதில்லை. ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய ரூ. 50ஐ முன்னாள் ராணுவத்தினர் கட்டணமாக வசூலிக்கின்றனர். திருச்சியில் மூன்று நாட்களாக இரண்டு லாப்டாப் மூலம் விண்ணப்பங்களை ஆன்லைனில் முன்னாள் ராணுவத்தினர் பதிவு செய்து வருகின்றனர்.
லாப்டாப் மூலம் ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முன்னாள் ராணுவத்தினர், ""லாப் டாப்களை திறந்த வெளியில் வைத்து பதிவு செய்யும் பணி மேற்கொள்வதால், துசி, மழை, காற்று, வெயில் போன்றவைகளால் லாப்டாப் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இந்த இடத்தில் எங்களுக்கு பாதுகாப்பாக ஷெட் போட்டுக் கொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும்,'' என்று கூறினர்.
கவனம் தேவை புதிய வைரஸ்
கடந்த சில வாரங்களாக ரோபாட் (Robot) என்ற பெயரில் புதிய வைரஸ் ஒன்று இமெயில் வழியாக உலவி வருகிறது. உங்களுடைய இன்டர்நெட் முகவரியை மையமாகக் கொண்டு வேண்டத்தகாத செயல்களெல்லாம் நடைபெறுகிறது என்றும் அதற்கு வைரஸ் ஒன்றுதான் காரணம் என்றும் இமெயில் ஒன்று உங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த வைரஸினை நீக்க உங்களுக்கு இலவசமாக பேட்ச் பைல் ஒன்று அனுப்பவா என்று கேட்கப்படும். பதறிப்போய் இலவசம் தானே என்று ஓகே கொடுத்தவுடன் பேட்ச் பைல் ஒன்று உங்களுக்கு அனுப்பப்படும்.
இந்த பேட்ச் பைலினை நீங்கள் செயல்படுத்தாவிட்டால் விரைவில் உங்கள் இமெயில் அக்கவுண்ட் தடுக்கப்பட்டு உங்கள் கட்டுப்பாட்டை இழக்கும் என்றும் எச்சரிக்கை விடப்படுகிறது. அந்த பேட்ச் பைலை நீங்கள் கம்ப்யூட்டரில் அமைத்தவுடன் அதன் வழியாக ட்ரோஜன் வைரஸ் ஒன்று கம்ப்யூட்டரில் விண்டோஸ் சிஸ்டம் போல்டரில் windev72b5203e.sys என்ற பெயரில் அழகாக அமர்ந்து கொள்கிறது. இதற்கு Trojan.Packed.13, W32/ Nuwar@MM, Worm:Win32/ Nuwar.JT மற்றும் Mal/DorfA என்ற பெயர்களும் தரப்படுகிறது. இது வழக்கம்போல உங்கள் முகவரி புக்கில் இருக்கிற வர்களுக்கு இந்த வைரஸை அனுப்புகிறது. உங்கள் இமெயில் அக்கவுண்ட் குறித்த தகவல்களை இந்த வைரஸ் அனுப்பியவர்களுக்கு அனுப்புகிறது. எனவே இது போன்ற எச்சரிக்கை இமெயிலில் வந்தால் அதை அலட்சியப் படுத்தி அழித்து விடுங்கள்.
இந்த பேட்ச் பைலினை நீங்கள் செயல்படுத்தாவிட்டால் விரைவில் உங்கள் இமெயில் அக்கவுண்ட் தடுக்கப்பட்டு உங்கள் கட்டுப்பாட்டை இழக்கும் என்றும் எச்சரிக்கை விடப்படுகிறது. அந்த பேட்ச் பைலை நீங்கள் கம்ப்யூட்டரில் அமைத்தவுடன் அதன் வழியாக ட்ரோஜன் வைரஸ் ஒன்று கம்ப்யூட்டரில் விண்டோஸ் சிஸ்டம் போல்டரில் windev72b5203e.sys என்ற பெயரில் அழகாக அமர்ந்து கொள்கிறது. இதற்கு Trojan.Packed.13, W32/ Nuwar@MM, Worm:Win32/ Nuwar.JT மற்றும் Mal/DorfA என்ற பெயர்களும் தரப்படுகிறது. இது வழக்கம்போல உங்கள் முகவரி புக்கில் இருக்கிற வர்களுக்கு இந்த வைரஸை அனுப்புகிறது. உங்கள் இமெயில் அக்கவுண்ட் குறித்த தகவல்களை இந்த வைரஸ் அனுப்பியவர்களுக்கு அனுப்புகிறது. எனவே இது போன்ற எச்சரிக்கை இமெயிலில் வந்தால் அதை அலட்சியப் படுத்தி அழித்து விடுங்கள்.
Monday, August 6, 2007
திரவுபதி அம்மன் கோயில் நுழைவு போராட்டம்
விடுதலை சிறுத்தை அமைப்பு பொதுச்செயலாளர் திருமாவளவன் தலைமையில், கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோயிலில் இன்று ஆலய நுழைவு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இது குறித்து மாவட்ட செயலாளர் இமயவரம்பன் கூறுகையில், ""திரவுபதி அம்மன் கோயில் தொடர்பான வழக்கு சேலம் உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருதரப்பும் நுழைய முடியாதபடி கோயிலுக்கு "சீல்' வைக்கப்பட்டுள்ளது.
இருதரப்பும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க ஒப்புக் கொண்டுள்ளோம். இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்ட ஆலய நுழைவு போராட்டம் ரத்து செய்யப்படுகிறது,'' என்றார். மேற்கு மண்டல செயலாளர் தமிழமுதன், ஆதவன், தமிழ்வேந்தன், ராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
இருதரப்பும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க ஒப்புக் கொண்டுள்ளோம். இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்ட ஆலய நுழைவு போராட்டம் ரத்து செய்யப்படுகிறது,'' என்றார். மேற்கு மண்டல செயலாளர் தமிழமுதன், ஆதவன், தமிழ்வேந்தன், ராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
Wednesday, August 1, 2007
கோவை குண்டு வெடிப்பு:
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி 13 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சங்கிலி தொடர் குண்டு வெடிப்பில் 58 பேர் உடல் சிதறி பலியானார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் படு காயம் அடைந்தனர்.இது தொடர்பாக அல்- உம்மா இயக்க தலைவர் பாட்சா, செயலாளர் அன்சாரி, கேரள மக்கம் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உம்பட 168 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் இறந்து விட்டார். ஒருவர் அப்ரூவராக மாறி விட்டார். இந்த வழக்கை விசாரிக்க தனிக் கோர்ட்டு அமைக்கப்பட்டது. பாதுகாப்பு நலன்கருதி கோவை மத்திய சிறை அருகே இருந்த நூலக கட்டிடமே தனிக்கோர்ட்டாக மாற்றப்பட்டு வழக்கு நடந்து வந்தது. இதையடுத்து அரசு தரப்பு, எதிர்தரப்பு வாதங்கள் நடந்து முடிந்தது. ஆகஸ்டு 1-ந்தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி உத்திராபதி அறிவித்தார். இதையொட்டி கோவை நகர், மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. காலை 9.45 மணி அளவில் 6 போலீஸ் வேன்கள் புடைசூழ பலத்த பாதுகாப்புடன் நீதிபதி உத்திராபதி தனிக்கோர்ட்டுக்கு வந்தார். கோர்ட்டுக்கு சென்றதும் காரை விட்டு இறங்கிய அவர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தனது அறைக்கு சென்றார். அவரைத் தொடர்ந்து அரசு, எதிர்தரப்பு வக்கீல்களும் சென்றனர். காலை 10.20 மணி முதல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அணி, அணியாக வந்தனர். 15 பேர், 15 பேராக அழைத்து வரப்பட்டனர். 10.30 மணிக்கு அவர்கள் மீதான குற்றச் சாட்டுகள் குறித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பு விவரம் வரு மாறு:-
முதல் குற்றவாளியான அல்உம்மா இயக்கத் தலைவர் பாட்சா மீது 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது. அதில் 2 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மதானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி அறிவித்தார். இதையடுத்து பத்து பத்து பேராக அழைத்து அவர்கள் மீதான குற்றங்கள் குறித்து எடுத்து கூறி குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். மதியம் 1-30 மணி அளவில் 102 பேர் ஆஜர்படுத்தப்பட்ட தில் மதானி தவிர மற்ற 101 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
- நன்றி - மாலைமலர்
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு
கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த பயங்கர சம்பவத்தில் 58 பேர் உடல் சிதறி பலியானார்கள். 250 பேர் படுகாய மடைந்தனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தனியார் மற்றும் பொது சொத்துகள் சேதமடைந்தன. இச் சம்பவம் தொடர்பாக அல்உம்மா நிறுவனர் பாஷா, பொதுச் செயலர் அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி, மைசூர் வெடிமருந்து வியாபாரி ரியாசுர் ரகுமான் உள்ளிட்ட 168 பேர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை தனிக்கோர்ட்டில் நடந்து வந்தது. சாட்சிகள் விசாரணை முடிந்து, இரு தரப்பு வக்கீல்கள் விவாதம் நடந்து முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்று தீர்ப்பு கூறப்படும் என்று தனி நீதிமன்றம் அறிவித்திருந்தது. குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் தீர்ப்பு கூறப்படுவதால் கோவை நகர் முழுவதும் இன்று ரெட் அலர்ட் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை முதலே நகரில் உச்சகட்ட டென்ஷன் நிலவியது.
கோவை பாலக்காடு சாலையில் மதுக்கரை அருகே சோதனைச்சாவடி அமைக்கப் பட்டு கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்துக்குள் நுழையும் வாகனங்கள் தீவிரமாக தணிக்கை செய்யப்பட்ட பின்னரே நகருக்குள் அனுமதிக்கப்பட்டன. மத ரீதியான பதற்றம் நிறைந்த உக்கடம், கோட்டை மேடு, என்.எச்., ரோடு, பிலால் எஸ்டேட், மஜீத்காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், போத்தனுõர் மற்றும் கெம்பட்டி காலனி, பூ மார்க்கெட், செல்வபுரம், சிவானந்தா காலனி, ரத்தினபுரி, குனியமுத்துõர், சுந்தராபுரம் பகுதிகளில் சிறப்பு காவல் படையினர் நேற்று இரவு முதலே ரோந்து சுற்றி வந்தனர். இதுதவிர மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், மத வழிபாட்டு தலங்கள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் விமான நிலையத்தில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. ஆங்காங்கே வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு, துப்பறியும் மோப்ப நாய் பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கோவை மத்திய சிறைக்கு அருகில் உள்ள தனிக் கோர்ட்டை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பலத்த பாதுகாப்புடன் தனிக்கோர்ட் நீதிபதி உத்ரபதி காலை 10 மணிக்கு கோர்ட்டுக்குள் வந்தார். வந்த உடனேயே அவர் குற்றவாளிகள் பட்டியலை அறிவிக்கத் தொடங்கினார். குற்றம் சாட்டப்பட்ட 168 பேரில் 153 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். 14வது குற்றவாளியாக இருந்த கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நசீர் மதானி உள்பட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் படாததால் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். மீதமுள்ள 7 பேரில் ஒருவர் ஏற்கனவே அப்ரூவர் ஆகி விட்டார். ஒருவர் சிறையில் இருந்தபோது உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். 5 பேருக்கு வரும் 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட அப்துல் நசீர் மதானி கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் ஆவார். மதானி விடுதலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் கேரளாவில் உள்ள தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். பாலக்காட்டில் பட்டாசுகள் வெடித்து மதானியின் விடுதலையை தொண்டர்கள் கொண்டாடினார்கள்.
- நன்றி : தினமலர்
Subscribe to:
Comments (Atom)